நுவரெலியா உட்பட நாட்டில் 17 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 63 அயிரத்து 317 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 22 ஆயிரத்து 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நேற்றுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். ஒருவர் காணாமல்போயுள்ளார். ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
ஆயிரத்து 253 வீடுகள் பகுதியளவும், 23 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.