நுவரெலியா, பதுளை உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 419 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
4 வீடுகள் முழுமையாகவும், 114 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 430 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 562 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.










