சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் பதவியில் இருந்து வைத்தியர் ஜயருவன் பண்டார நீக்கப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி விடுத்த பணிப்புரையின் பிரகாரமே அவரிடமிருந்து அந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளராக பணியாற்றிய ஜயருவன் பண்டார அந்த பதவியில் இருந்தும் அண்மையில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் பிரதி பணிப்பாளராக பணியாற்றிவருகின்றார்.
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான தகவல்களை மிகவும் சிறப்பாக வெளியிட்டு, மக்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி பெரும் வரவேற்பை ஜயருவன் பண்டார பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.