8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு, நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
சமன் பிரிய ஹேரத் எம்.பி. சுகயீனம் காரணமாக முன்னுரிமை அடிப்படையில் வாக்கினை பதிவு செய்தார். அவர் சேலைன் போத்தலுடன் சபைக்கு வந்திருந்தார்.
வாக்களிப்பின் பின்னர் வைத்தியசாலை சென்றார். மற்றுமொரு எம்.பியும் சிகிச்சைபெற்ற நிலையில் இன்று வாக்களிக்க வந்திருந்தார்.
சபையின் அனுமதியுடன் இருவருக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டது.
