சேவையில் ஈடுபடாத தனியார் பஸ்களின் அனுமதிப் பத்திரம் இரத்து?

எரிபொருளை பெற்றுக்கொண்டு சேவையில் ஈடுபடாத தனியார் பஸ் உரிமையாளர்களின் போக்குவரத்து அனுமதி பத்திரத்தினை இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

பயணிகள் சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களின் வாயிலாக டீசல் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

எனினும் டீசலை பெற்றுக்கொண்டு சில தனியார் பஸ்கள் இதுவரை சேவையில் ஈடுபடவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு சேவையில் ஈடுபடாதவர்களின் போக்குவரத்து அனுமதி பத்திரம் விரைவில் இரத்து செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Related Articles

Latest Articles