சைக்கிளில் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய விஜய்

சென்னை நீலாங்கரையில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பலரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

திரையுலக பிரபலங்களான அஜித், ரஜினிகாந்த், சூர்யா ஆகியோர் காலையில் முதலிலேயே வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரையில் இருக்கும் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை, சைக்கிளில் வந்து பதிவு செய்தார்.

Related Articles

Latest Articles