” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன்படி தீர்மானத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார். நடுநிலை வகித்த நாடுகளின் வாக்குகளையும் இணைத்து கணக்கு சூத்திரம் தயாரித்துள்ளார்.
அப்படியானால் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 லட்சம் வாக்குகள் கிடைத்தன. எனக்கு 55 லட்சம் வாக்குகள் கிடைத்தன. 27 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. தினேஷ் குணவர்தனவின் கணக்கு சூத்திரத்தின் பிரகாரம் அத்தேர்தலில் எனக்கே வெற்றி.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.