ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே இந்நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றிடம் தெளிவாக வேலைத்திட்டம் இல்லை எனவும் அவர் கூறினார்.
வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை ரணில் விக்கிரமசிங்கவே மீட்டெடுத்தார். தற்போது ஐஎம்எப் கடன்கூட கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டார்.










