ஜனாதிபதி – தமிழ் எம்.பிக்கள் சந்திப்பு திங்கள்வரை ஒத்திவைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்க, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த இரண்டாம் சுற்று பேச்சு பிற்போடப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இச்சந்திப்பை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இரண்டு நாள் பேச்சின் முதலாம் நாள் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது.

இந்தப் பேச்சில் 5 முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன. தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு மற்றும் அத்துமீறல்கள் மற்றும் படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகிய ஐந்து விடயங்கள் குறித்தே பேசப்பட்டன.

இந்நிலையில் 2 ஆம் சுற்று பேச்சு இன்று நடைபெறவிருந்தது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த வாக்கெடுப்பை கருத்திற்கொண்டே சந்திப்பு திங்கள்வரை பிற்போடப்பட்டுள்ளது.

 

Related Articles

Latest Articles