ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களின் நத்தார் வாழ்த்துச் செய்தி…

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி..

உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் இறைவன் மீதான பக்தியுணர்வை தூண்டும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது உயிர்ப்பு விழாவுக்கு அடுத்ததான உன்னதமான சமயப் பண்டிகையாகும்.

இது இயேசு நாதர் போதித்த மற்றும் நடைமுறையில் வாழ்ந்துகாட்டிய அமைதி, அன்பு, இரக்கம், சகவாழ்வு, கருணை போன்ற பண்பட்ட மனித சமூகத்தின் அடித்தளத்தை வடிவமைக்கும் உன்னத பெறுமானங்களை உள்ளடக்குகிறது.

சமூக ரீதியாக, நத்தார் கிறிஸ்தவ குடும்பங்கள் ஒன்றுகூடுவதற்கும், பரிசுகளை பரிமாறிக்கொள்வதற்கும், பகைமைகளை மறந்து பிணைப்பினை புதுப்பிப்பதற்குமான ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகும்.

இயேசு பிரான் போதித்த சமய நெறிகள் சமூகத்தின் நிலைத்தன்மைக்கு பங்களிக்கும் பல போதனைகளை கொண்டுள்ளது. பாவத்தின் இருளகற்றி, புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு சகோதர வாஞ்சையுடன் உதவுவது மற்றும் அனைத்து மனிதகுலத்தின் மீட்பிற்கான அர்ப்பணிப்பு என்பவை இவற்றில் முதன்மையானவை என்று நான் எண்ணுகிறேன்.

கோவிட் -19 தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார ரீதியாக செயலற்றிருக்கும் உலகை மீண்டும் எழுச்சி பெறச்செய்ய இந்த நன்நெறிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஒரு வருடத்திற்கும் முன்னர் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற கொடூர தாக்குதலின் கடுமையான வலிகளை சுமந்தவாறே இந்த நாட்டின் கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை கொண்டாடுகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஆயினும்கூட, அந்த அச்சங்களையும் பாதுகாப்பற்ற தன்மையையும் அகற்றுவதற்கும், அச்சம், சந்தேகம் இல்லாமல் அனைவரும் சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்குவதற்கும் எமக்கு முடிந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் அவ்வாறே வழங்கப்படும்.

இயேசு கிறிஸ்து போதித்த அமைதி மற்றும் அன்பின் நற்செய்தி உலகெங்கும் பரவட்டுமாக! இலங்கை வாழ் அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் மகிழ்ச்சியான எனது நத்தார் நல்வாழ்த்துக்கள்.” – என்றுள்ளது.

பிரதமர்..

நத்தார் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும், இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுபடுத்துகின்றது. இது மனித அன்பையும், கௌரவத்தையும் நினைவூட்டும் ஒரு நற்செய்தியாகும்.

இந்த நத்தார் தினத்தில் இலங்கை மற்றும் உலக வாழ் அனைத்து கிறிஸ்தவர்களது இல்லங்களிலும், உள்ளங்களிலும் அமைதியும், ஆரோக்கியமும் நிறைந்து விளங்க நான் மனதார பிரார்த்திக்கிறேன்.அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்!

செந்தில் தொண்டமான் – இ.தொ.கா. உபதலைவர்

கொரோனா எனும் கொடிய வைரஸைக் கொன்றொழிக்கும் பிறப்பாக இயேசு பாலனின் பிறப்பு அமைய வேண்டும் என்றும் அத்தகைய சிசுபாலனின் பிறப்பை அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்.

ஒவ்வொரு யுகங்களிலும், தீமைகளை அழிப்பதற்காக தெய்வங்கள், தேவர்கள் அவதாரம் எடுப்பதைப் போன்று, இந்த யுகத்தில், இந்த ஆண்டில் கொரோனா எனும் கொடிய சக்தியை அழிப்பதற்காக தேவபாலன் பிறப்பெடுக்கவுள்ளார்.

தன் மக்களுக்காக தன் இரத்தத்தையே தந்து காத்து இரட்சித்த இயேசு கிறிஸ்துநாதர், கொரோனாவால் செத்துமடியும் எம்மக்களைக் காத்து இரட்சிக்க வேண்டும்.

கிறிஸ்தவ சொந்தங்கள் மட்டுமன்றி அனைத்து இன மக்களும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடி மகிழவேண்டும். கொரோனாவை வெற்றிகொண்ட கிறிஸ்மஸ் தினத்தை அடுத்தவருடம் கொண்டாட வேண்டும் என்று, இந்நன்நாளில் உறுதிபூணுவோம்.

பொதுச் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றியும் கொண்டாட்டங்களை வீடுகளுக்குள்ளேயே மட்டுப்படுத்தியும், இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுங்கள்.

பழனி திகாம்பரம் – பா.உ.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள “கொரோனா” அச்சுறுத்தல் இலங்கைத் திருநாட்டையும் விட்டு வைக்கவில்லை. எமது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் கிறிஸ்தவ சகோதரர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தத்தமது வீடுகளில் இருந்தபடியே கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

இயேசுவின் பிறப்பு அகிலம் முழுவதற்கும் புதியதொரு செய்தியை சொன்னது. குழந்தை இயேசு பிறந்த அந்த இனிய நாளை நினைவுப்போற்றி நிற்கின்றது அந்த நத்தார் தினம். பொதுவாக பண்டிகை என்றாலே அதன் பண்பு உற்றார், உறவினர்கள் அன்பை அயலாருடன் கூடி குழாவி குடும்பமாய் உண்டு குதூகலிப்பதே என்பதாகும்.

துரதிஷ்டவசமாக இம்முறை நத்தார் தினத்தை கொண்டாடமுடியாதபடி COVID-19 கொரோனா தொற்று தடைபோட்டுள்ளது. சுகாதார அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றவேண்டும். எனவே கிருஸ்தவ சொந்தங்கள் கூடியவரை தமது வீடுகளிலிருந்து நத்தாரை கொண்டாடவேண்டும்.

கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு இடம்கொடுக்காமல் இயேசு பிறப்பின் மகிழ்ச்சியை ஆலுக்கால் பகிர்ந்துக்கொண்டு அனுஷ்டிப்பது சாலச்சிறந்தது.

எம். உதயகுமார் பா.உ.

நாடு எதிர்நோக்கியுள்ள “கொரோனா” அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு மக்கள் வாழ்வில் சுபிட்சம் ஏற்பட வேண்டும் .

உலக மக்கள் உய்வு பெற வேண்டி யூதர்கள் செய்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக் கொண்டும் பாரம் நிறைந்த சிலுவையை சுமந்து கொண்டும், முள் கிரீடத்தைத் தரித்துக் கொண்டும் இயேசு பிரான் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது.

மக்களுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டவரை சிலுவையில் அறைந்த நேரத்தில் “பிதாவே, இவர்கள் அறியாமல் செய்கின்றார்கள்: மன்னித்து அருளும்” என்று கூறிய உத்தமர் உலகுக்கு அவதரித்த உன்னத நாளை சிறப்பாகக் கொண்டாட முடியாவிட்டாலும், ஒவ்வொருவர் உள்ளத்திலும் அவர் நிச்சயமாகக் குடியிருப்பார் என்பதில் ஐயமில்லை.

இன்று எமது நாடும், மக்களும் எதிர்கொண்டுள்ள சகல பிரச்சினைகளும் நீங்கி சுபிட்சம் நிறைந்த எதிர்காலம் மலர வேண்டுவதோடு, ஒவ்வொருவரும் தமது சுய பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு பண்டிகையைக் கொண்டாடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

சோ. ஶ்ரீதரன், தொழிலாளர் தேசிய சங்கம்

நத்தார் பண்டிகையைக் கொண்டாடும் உலகெங்கும் வாழுகின்ற கிறிஸ்தவ மக்களுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் அகமகிழ்வு அடை கின்றேன்.

ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய் அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய் பாரம் சுமப் போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த பாலன் இயேசு பிறந்த நன்னாளில் கிறிஸ்தவ பெருமக்கள் மகிழ்ச்சிகரமாக பேருவகை யுடன் உள்ளனர்.

எமது நாட்டில் வாழுகின்ற கிறிஸ்தவ மக்கள் தமது சமய விழுமியங்களுடன் இனநல்லுறவுடனும் சகோதரத் துவத்துடனும் வாழுகின்றவர்கள். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதல் உயிர்த்தெழுதல் வரையிலான வாழ்க்கைச் சம்பவங்கள் பாவ மன்னிப்பையும் உலக சமாதானத்தையும் வலியுறுத்துவன. கர்த்தரின் தூதுவரின்

உலக துன்பங்கள் ஒழிந்து இன்பங்கள் நிலைத்திட இயேசு பிரானை வழிபடுவோம். இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.

Related Articles

Latest Articles