ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை பெறுவதற்கான முயற்சி வெற்றியளிக்காது என தான் நம்புகிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார் .
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அரசமைப்பினர் பிரகாரம் செப்டம்பர், ஒக்டோபர் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனாதிபதி நினைத்தால் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தலாம்.
அவ்வாறு இல்லாவிட்டால் 113 எம்.பிக்கள் இணைந்து யோசனையொன்றை வழங்கினால் முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்தலாம். இது சவாலுக்குரிய விடயம். எனவே, அந்த முயற்சி கைகூடாது என்றே கருதுகின்றேன்.
அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டு கட்சி ஐக்கியமாகவே முடிவெடுக்க வேண்டும். கட்சி எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.” – என்றார் எஸ்.பி. திஸாநாயக்க.