ஜீவன் மன்னிப்பு கோரியேஆகவேண்டும் – வேலுகுமார் வலியுறுத்து

” தாய்குலத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான் பகிரங்கமாக மன்னிப்புகோர வேண்டும்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதிச்செயலாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தாய்குலத்தை கொச்சைப்படுத்தியுள்ளார். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். தவறு செய்துவிட்டு அதற்கு மன்னிப்பு கோருவதற்கு பதிலதாக தவறு இடம்பெற்றது என்பதை மட்டும்தான் ஜீவன் ஏற்றுக்கொண்டுள்ளார். செய்த தவறுக்காக அவர் மன்னிப்பு கோரவில்லை. இதனையும் கண்டிக்கின்றேன். அவர் நிச்சயம் மன்னிப்பு கேட்டாக வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles