நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த சட்ட ரீதியில் அங்கீகாரம் கிடையாது என உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே, நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
டயனா எம்.பி. பதவியை இழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முஜிபுர் ரஹ்மானை ஐக்கிய மக்கள் சக்தி நியமித்துள்ளது.
