ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.
இவ்விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் எனவும் அவர் கூறினார்.
