தனிமைப்படுத்தப்பட்ட பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா!

தனிமைப்படுத்தப்பட்டுள்ள கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிளக்வோட்டர் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகள் ‘லொக்டவுன்’ செய்யப்பட்டன.

அதன்பின்னர் அத்தோட்டத்திலுள்ள 475 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் 12 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் தொடர்கின்றன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles