‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 800 பேர் கைது’

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 800 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

”   முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் நடமாடியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இன்றுவரை 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு எதிராக எதிர்காலத்தில் நிச்சயம் வழக்கு தாக்கல் செய்யப்படும். ” – என்றார்.

Related Articles

Latest Articles