தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 1,794 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய ஆயிரத்து 794 பேர் கடந்த 30 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் நடமாடியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles