தனி வீட்டு திட்டத்தை விமர்சிப்பவர்களுக்கு திகா சாட்டையடி

மலையகத்துக்கான தனிவீட்டுத் திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் சிலர் போலிப்பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

சாமிமலை, மாக்கொல தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கட்சி மற்றும் தொழிற்சங்க பேதமின்றியே மலையகத்துக்கான தனி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. எவ்வித பாகுபாடுமின்றியே வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. ஆனால், வீடமைப்பு திட்டம் தொடர்பில் சிலர் வீண் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

தனது தாத்தாவும், அப்பாவும்தான் வீடமைப்பு திட்டத்தை கொண்டுவந்தனர் என ஒருவர் கூறுகிறார். சந்திரசேகரனின் பெயரையும் உச்சரிக்கின்றனர். கடந்த காலங்களில் சந்திரசேகரனின் பெயரை குறிப்பிடாதவர்கள் இன்று வாக்குகளுக்காக அவ்வாறு செய்கின்றனர்.

நில உரிமை தொடர்பில் கதைக்கின்றனர். நான் போராடாமலேயே எமது மக்களுக்கு நில உரிமையினை பெற்றுக்கொடுத்தேன். 80 வருடங்களாக ஒரு பேட்டைகூட அமைக்காதவர்கள், இனி கைத்தொழில் பேட்டைகள் கொண்டுவரப்போகின்றார்களாம்.

எதிர்வரும் 6 ஆம் திகதி நாமே வெற்றிபெறுவோம். நான் அமைச்சராவேன். மக்களுக்கான சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பேன்.” – என்றார்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

Related Articles

Latest Articles