தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டமானின் பிறந்தநாள்

இலங்கையில் பிரபல அரசியல் பிரமுகராக இருக்கும் செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் தமிழகத்திலுள்ள பல கிராமங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை சிவகங்கை திண்டுக்கல் மதுரை தஞ்சாவூர் திருச்சி சேலம் நாமக்கல் தேனி பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஜல்லிக்கட்டு சங்கத்தைச் சேர்ந்த குழுவினர் வழங்கியுள்ளனர்.பிரபல ஜல்லிக்கட்டு ஆர்வலரான செந்தில் தொண்டமானின் பிறந்த நாளை முன்னிட்டு 20 அடி உயரத்திற்கு கட் அவுட் வைக்கப்பட்டு அதற்கு முன்பாக பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.தமிழர்களின் பாரம்பரிய கலையான ஜல்லிக்கட்டை உலக அளவில் கொண்டு சென்ற வெற்றி வீரரான செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் கடல் கடந்தும் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்படுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பல்வேறு நாடுகளில் தமிழர்கள் உயர்ந்த பதவிகளில் வகுத்து வருகிறார்கள் ஆனால் யாருக்கும் இதுபோன்று அவர்களுடைய பிறந்த நாளன்று கடல்கடந்து தமிழகத்தில் சிறப்பாக பிறந்தநாள் கொண்டாடியது இல்லை ஆனால் ஜல்லிக்கட்டு ஆர்வலரான செந்தில் தொண்டமானின் தமிழ் கலாச்சாரத்திற்கு அவர் அளித்த பங்களிப்பின் காரணமாக அவருடைய பிறந்தநாள் தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில் தொண்டமானின் பிறந்தநாளுக்கு தமிழகம் ஆந்திரா மற்றும் புதுவையை சேர்ந்த அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

செந்தில் தொண்டமானின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவில் உள்ள பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கானோர் செந்தில் தொண்டமானின் புகைப்படத்தை பதிவிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு ஆர்வலராக தமிழ் கலாச்சாரத்தை உலக அளவில் கொண்டு சேர்த்திருக்கும் செந்தில் தொண்டமானுக்கு தமிழகத்திலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் ஏற்கனவே ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கடந்த இருபது வருடங்களில் உருவாகி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பதுளையிலும் அவரது ஆதரவாளர்கள் சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

நன்றி – படங்கள் : இந்திய ஊடகங்கள்

Related Articles

Latest Articles