தலவாக்கலை புகையிரத நிலையத்தில் அமைந்துள்ளது ஆயுத களஞ்சியசாலையில் இன்று நண் பகல் 12 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ காரணமாக அக்களஞ்சியசாலை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
குறித்த தீ விபத்தால் எவருக்கும் உயிர் ஆபததோ காயங்களோ ஏற்படாத போதிலும் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு பொருட்களை தவிர அனைத்தும் எரிந்து நாசமாகிஉள்ளன.
குறித்த தீயினை ஊழியர்கள் கட்டுப் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தலவாக்கலை பிரதேசத்திற்கு கடும்மழை பெய்வருவதன் காரணமாக தீ கட்டுப்படுதுவது இலகுவாக அமைந்தன.
குறித்த தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இத் தீவிபத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்களையும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்










