தலவாக்கலை லூசா தோட்டத்தில் 4 சிறார்கள் மாயம்!

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தைச் சேர்ந்த நான்கு சிறார்கள் காணாமல்போயுள்ளார்.

முரளிகிருஷ்ணன் லக்சிக்கா (வயது 16), ராஜகுரு மிதுஷா (வயது 16), சுந்தர்ராஜ் தர்ஷினி (வயது 16), மற்றும் ராஜகுரு கோபிசாகர் (வயது 15) ஆகியோரே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

நேற்று முன்தினம் (14) ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என அவர்களின் பெற்றோர்களால் முறைப்பாடு ஒன்று நேற்று (15) திங்கட்கிழமை தலவாக்கலை பொலிஸில் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் உட்பட சிறுமிகள் தமது பெற்றோர்களுக்கு சொல்லாமல் வீட்டிலிருந்து வெளியே சென்று காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு 0764612289, 0771546724 தொடர்புகொள்ளுமாறு பெற்றோர்கள் உதவி கோரியுள்ளனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்

 

Related Articles

Latest Articles