தாக்குதலை உடன் நிறுத்துங்கள்! ஈரானிடம் ஐ.நா. வலியுறுத்து

இஸ்ரேல்மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதலை ஐ.நா. கண்டித்துள்ளதுடன், அவசர பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

“ ஈரானால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த விரோதங்களை உடனடியாக நிறுத்துமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.” என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இஸ்ரேல் மீது ஈரானின் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டத்திற்காக ஞாயிற்றுக்கிழமை கூடும் என்று அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த அவசர கூட்டத்தைக் கூட்டுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Latest Articles