தனது தாயை கல்லால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த தாயின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர்.
62 வயதுடைய சாரணியா தோட்டம் தங்கமலை பிரிவு கந்தேகெதரயை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பொசன் பௌர்ணமி தினமான 21 ம் திகதி இரவு மகனுக்கும் தாய்க்கும் இடையே ஏற்பட்ட வாய் தர்க்கத்தின் பின்னர் குறித்த பெண்ணின் மகன் கல்லால் குறித்த பெண்ணை தாக்கியதாகவும் , கல்லால் தாக்கப்பட்ட பெண் பலத்த காயமடைந்ததாகவும் சிகிச்சைகளுக்காக கந்தேகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 44 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான குறித்த பெண்ணின் மகன் கந்தேகெதர பொலிஸாரினால் கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரின் மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகவும் தாய்க்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட காணி தகராறு கொலையில் முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
