தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து விசாரணை வேட்டை தீவிரம் – இதுவரை 140 பேரிடம் வாக்குமூலம்!

ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் இதுவரை 140 பேரிடம் சிஐடியினர் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.

அத்துடன், தினேஷ் ஷாப்டரின் மரணம் பதிவாகிய இடத்தில் காணப்பட்ட இரத்த மாதிரிகள் உள்ளிட்ட ஆதாரங்களை மரபணு பரிசோதனைக்காக அரச இராசயன பகுப்பாய்வாளருக்கு அனுப்ப கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் நேற்று(02) அனுமதி வழங்கியிருந்தது.

அதனடிப்படையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு இணங்க தினேஷ் ஷாப்டரின் இரத்த மாதிரி, நகங்கள் உள்ளிட்ட உடற்கூறுகள் மற்றும் சம்பவ இடத்தில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் தொடர்பில் மரபணு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் பொரளை பொது மயானத்திற்கு அருகில் காருக்குள் கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கடந்த 15ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டார்.

அதன்பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Articles

Latest Articles