தியத்தலாவை விபத்து: இருவர் கைது – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட எழுவர் பலி

2024 பொக்ஸ்ஹில் கார்பந்தயம் தொடர்பில் பொலிஸாரால் இருவர் கை செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்த காரொன்று காரொன்று திடலை திட்டு விலகி, பார்வையாளர்கள்மீது மோதியது.

இவ்விபத்தில் 4 போட்டிக் கண்காணிப்பாளர்கள், மூன்று பார்வையாளர்கள் என இதுவரை எழுவர் பலியாகியுள்ளனர். பார்வையாளர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாவர். (தாத்தா, பாட்டி, பேத்தி)

Related Articles

Latest Articles