திலகர்மீது கை வைக்க அஞ்சும் திகா! நேற்றைய கூட்டத்தில் ‘கப்சிப்’!!

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் நிர்வாகக் குழு அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தலைமையில் நேற்று கூடியதுடன், பல முக்கியமான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

நிர்வாகக் குழுவுக்குள் இரண்டு பேர் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளனர்.அத்துடன், தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் பேராளர் மாநாடு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

பேராளர் மாநாட்டில் கட்சியின் உயர் பதவிகள் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்க ஏகமானதாக முடிவுசெய்யப்பட்டது.

இங்கு கருத்து வெளியிட்டிருந்த பழனி திகாம்பரம்,

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் அதன் அரசியல் பிரிவு என்பன ஒரு ஜனநாயக பண்பை பேணும் கட்டமைப்பாகும். அனைவருக்கும் இங்கு சுதந்திரமாக கருத்துகளை வெளியிட முடியும்.

எமது பேராளர் மாநாட்டில் கட்சியின் தலைவர் பதவி, பொதுச் செயலாளர் பதவி, தேசிய அமைப்பாளர் பதவி, நிதி செயலாளர் பதவி மற்றும் கட்சியின் ஏனைய உயர் பதவிகளுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எவர் வேண்டுமானாலும் போட்டியிடலாம். பேராளர் மாநாட்டில் பதவிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலாளர் தேசிய முன்னணின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து திலகரை நீக்குவது பற்றியோ அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாகவோ விரிவாக ஆராயப்படவில்லை எனவும், பேராளார் மாநாட்டை கூட்டி பொதுச்செயலாளரை தெரிவுசெய்யும்வரையில் புதியவர் நியமிக்கப்படமாட்டார் எனவும் கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

Related Articles

Latest Articles