திவுலப்பிட்டிய ஊழியர்களில் மேலும் 139 பேருக்கு கொவிட் தொற்று

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த மேலும் 139 ஊழியர்கள் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

அவர்களுடன் இன்றுமட்டும் 582 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 708 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த சுமார் 1500 ஊழியர்களிடம் பீ.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilanka #lka #COVID19SL

 

 

Related Articles

Latest Articles