துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கும், உளவு பார்த்தவருக்கும் நஞ்சு கலந்த பால் – நடந்தது என்ன?

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர்கள் இருவருக்கு பொலிஸ் நிலையத்தில் வைத்தே நஞ்சு கலந்த பால் வழங்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவர் , அவர்களை பார்வையிடவந்தார் எனக் கூறப்படும் நபர் வழங்கிய நஞ்சு கலந்த பால் பொதிகளை அருந்தி ஆபத்தான நிலையில் வைத்தி யசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற ஜிந்துப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்ட நபர், அதற்காக உளவு தகவல் வழங்கிய நபர் ஆகியோரே இவ்வாறு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வழங்கப்பட்ட பால் பக்கட்டை வழங்கிய பின்னர் அருந்திய கைதிகளில் ஒருவர் உடனடியாக மயங்கி வீழ்ந்துள்ளார்.

சற்று நேரத்தில் மற்றவரும் மயங்கி வீழ்ந்துள்ளார். அதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பால் பாக்கெட்டுகளை கொண்டு வந்தவர் எனக் கூறப்படும் நபர் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவ ரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் எடுத்துவருகின்றனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles