துப்பாக்கி இயங்குகின்றதா என்று, சிறுவனின் வாயில் வைத்து பரீசிலித்த போது, துப்பாக்கியின் ரவை பாய்ந்ததினால், சிறுவன் ஆபத்தான நிலையில் , பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் துப்பாக்கியை பரிசீலனை செய்த 21 வயது இளைஞன் கொஸ்லந்தை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கொஸ்லந்தைப் பகுதியின் கெலிப்பனவெல என்ற கிராமத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய சிறுவனின் வாயிலேயே, துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றிருக்கின்றது.
கெலிப்பனவெல கிராமத்தின் 21 வயதான இளைஞன், தம்மிடமிருந்த உள்ளுர் தயாரிப்பிலான கைத்துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, அருகிலிருந்த சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்து, துப்பாக்கியை, துப்பாக்கியை இயங்க வைத்து பரிசீலனை செய்திருக்கின்றார். அவர் வேளையிலேயே துப்பாக்கி ரவை பாய்ந்து வெடித்திருக்கின்றமை , ஆரம்ப பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கி சூடுபட்ட 12 வயது சிறுவன், பிரதேச வைத்தியசாலையில் ஆரம்பசிகிச்சைகள் அளிக்கபட்டு, அம்புலன்ஸ் வாகனம் மூலம் அச்சிறுவன் பதுளை அரசினர் மருந்துவ மனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், சிறுவனின் நிலைக்கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
எம். செல்வராஜா,










