இலங்கையின் தனியார் மருத்துவமனை மற்றும் இரசாயனகூட சேவைத் துறையில் தமது சிறப்பை மீண்டும் உறுதிப்படுத்தி 2020 தேசிய தரம் மற்றும் உற்பத்தித்திறன் சம்மேளன விருது வழங்கும் நிகழ்வில் 50 விருதுகளை ஹேமாஸ் மருத்துவமனைக் குழுமம் வென்றுள்ளது.
இந்த விருதுகளில் 36 தங்கம் 12 வெள்ளி மற்றும் 2 வெண்கல விருதுகளையும் வெல்வதற்கு ஹேமாஸ் மருத்துவமனைக் குழுமத்தினால் முடிந்துள்ளதுடன் ஒட்டுமொத்த விருது வழங்கும் நிகழ்வின் போது அதிகமான விருதுகளை தனதாக்கிக் கொண்ட நிறுவன குழுமம் என்ற கௌரவத்தையும் ஹேமாஸ் மருத்துவமனை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெற்காசியாவில் முதலாம் இடத்திலுள்ள வைத்தியசாலை என்ற உறுதியுடனும் மற்றும் முறையான உட்பார்வையுடன் செயற்பட்டு வரும் ஹேமாஸ் மருத்துவமனை மற்றும் இரசாயனக் கூட குழுமம் அண்மையில் இடம்பெற்ற 2020 தேசிய தரம் மற்றும் உற்பத்தித்திறன் சம்மேளன விருதுவழங்கும் நிகழ்வில் புதிய சாதனையொன்றை படைத்து ஒரு நிறுவனம் பெறக் கூடிய அதிக விருதுகள் மற்றும் சேவைத் துறையில் நிறுவனமாக அதிக விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளது.
அத்துடன் இந்த விருது வழங்கும் நிகழ்வில் “Best Lean Six Sigma Projects” பிரிவின் கீழ் பெற்றுக் கொண்ட அதிகமான தங்க விருதுகளை வென்றுள்ளது.
தேசிய தரம் மற்றும் உற்பத்தித்திறன் சம்மேளன விருது வழங்கும் நிகழ்வில் அதிகமான விருதுகளுக்கு சொந்தக்காரர் என்பதுடன் இந்த வருட இறுதியில் இந்தியாவின் ஹைதரபாத் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச தரக் கட்டுப்பாட்டு விருது வழங்கும் நிகழ்விற்காக தகுதி பெறவும் ஹேமாஸ் மருத்துவமனை மற்றும் இரசாயனகூட குழுமத்திற்கு முடிந்துள்ளது.
“முன்மாதிரியான மருத்துவமனை சேவையை நடத்திச் செல்வதற்காக தரம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியன இரண்டு பிரதான காரணிகளாக அமைவதுடன் இந்த இரு காரணிகளையும் மிக இலகுவாக எடுத்துக்கொள்ளவோ அல்லது மறந்து விடுவதற்கோ ஒருபோதும் முடியாதமைக்கு காரணம் பல்லாயிரக் கணக்கான உயிர்களின் தீர்மானம் இதன் அடிப்படையிலேயே தங்கியுள்ளது.
விசேடமாக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை, மருத்துவமனையின் அடிப்படை வசதிகளின் தரம், ஆகிய பிரிவுகள் எப்பொழுதும் உச்ச அளவில் வைத்திருத்தல் முக்கியமானது.
அதனால் இந்த விருது வழங்கும் நிகழ்வு எமக்கு முக்கியமாக இருப்பதற்கு காரணம் நோயாளர்களின் பாதுகாப்பு, மற்றும் நாட்டிலுள்ள சுகாதார சேவைத் துறையில் புத்தாக்கங்களுக்காக ஹேமாஸ் மருத்துவமனைக் குழுமத்தின் அர்ப்பணிப்பு இந்த விருதுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையர்களின் ஆரோக்கியத்திற்காக நாம் எப்பொழுதும் உற்பத்தித்திறன் மாற்றத்தை நோக்கி பயணிப்பதுடன் மருத்துவ சிறப்பின் எல்லைகளை விஸ்தரிப்பதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.” என ஹேமாஸ் மருத்துவமனை மற்றும் இரசாயனக்கூட குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், தனியார் மருத்துவமனை மற்றும் பராமரிப்பு இல்ல சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்கித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.