தேசிய வைத்தியசாலையின் தாதிக்கும் கொவிட்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பொதுமக்களிடம் விசேட வேண்டுகோள்!
தேசிய வைத்தியசாலையின் தாதிக்கும் கொவிட்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை கொவிட் கொத்தணித் தொடரில் கொவிட் ஏற்பட்ட ஒருவர் மூலம் குறித்த தாதிக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட குறித்த தாதியுடன் பணியாற்றிய சக பணியாளர்களிடமும் இன்று பி.சீ.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் 19 நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களையும், பொதுமக்களையும் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெறும் நோயாளர்கள் மட்டும், உரிய பிரிவுகளின் தொலைபேசி இலக்கங்கள் மூலம் அழைத்து உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Related Articles

Latest Articles