ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி தேயிலைத் தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
லெதண்டி தோட்ட காரியாலயத்திற்கு செல்லும் பாதையில் இன்று காலை 08 மணியளவில் தோட்ட காரியாலய உத்தியோகஸ்தர் , இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை கண்டு தோட்ட நிர்வாகத்தின் ஊடாக ஹட்டன் பொலிஸாருக்கும் நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்தார்.
இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர், இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தையின் உடல் பகுதியில் காயங்கள் உள்ளன.
சிறுத்தையின் உடல் பரிசோதனைக்காக உடவலவை மிருக வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்
