மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டத்தில் இன்று (28) ஏழு தோட்ட தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
நால்வர் தங்கியிருந்து சிகிச்சைபெறுகின்றனர் எனவும், ஏனையோர் சிகிச்சைகளின் பின்னர் வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் – பெருமாள்