தொழிற்சங்க துறவி வீ.கே. வெள்ளையின் ஊரில் பிரச்சாரத்தை ஆரம்பித்தது தொ.தே.ச.!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் நோர்வூட் பிரதேச சபைக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரச்சாரக் கூட்டம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவர் வீ.கே.வெள்ளையனின் சொந்த ஊரான பொகவந்தலாவ முத்துலெட்சுமி தோட்டத்தில் இன்று ஆரம்பமானது.
இறை வழிபாடுகளின் ஈடுபட்ட பின்னர் இவ்வாறு பிரச்சாரம் ஆரம்பமானது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியின் தலைவர் பா.சிவநேசன் , சங்கத்தின் பிரதி பொதுச்செயஸாளர் பழனிவேல் கல்யாணகுமார் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்

Related Articles

Latest Articles