” நம்பி ஏமாந்தேன்” – உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திய கோட்டா

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்க சென்றுள்ளாராம்.

“ ஹா…வாருங்கள் சாகர, என்னை மறந்துவிட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்” எனக்கூறி சாகரவை வரவேற்றாராம்.

“ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” சேர் என கோட்டாவிடம் கூறிய சாகர, வந்த நோக்கத்தையும் விவரித்தாராம்.

“ அரசியல் நடவடிக்கை எல்லாம் எப்படி போகின்றது..” என கோட்டா கேட்க, “ சிறப்பாக செல்கின்றது சேர், எமது கட்சிக்கு எதிராக பின்னப்பட்ட சூழ்ச்சி வலைகளை தற்போது அவிழ்த்துவருகின்றோம்.” என பதிலளித்தாராம் சாகர.

“ அருகில் உள்ளவர்கள் அதிகம் நம்பக்கூடாது சாகர. நானும் அவ்வாறு நம்பிதான் ஏமாந்தேன். பதவிகளை வழங்கினேன். அவர்களை நம்பியது என் தவறுதான்.” எனக் கூறி கலங்கினாராம் கோட்டா.

“ சேர், பழைய கதை வேண்டாம். நாம் முன்நோக்கி செல்வோம்.” எனக்கூறி விடைபெற்றாராம் சாகர.

Related Articles

Latest Articles