கந்த சஷ்டி தினத்தன்று யாழ்ப்பாணத்தில் உள்ள திருஞானசம்மந்தர் மடத்தில் நல்லை ஆதீனத்தை இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் சந்தித்து ஆசிப்பெற்றார்.
இச்சந்திப்பின் போது ஜனாதிபதி ஆணைக்குழுவினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டில் இந்து சமய சட்டங்கள்இஇந்து சமயத்தின் கொள்கைகள் முக்கியத்துவம் போன்றவற்றை பாதுகாப்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.