நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினுவாங்கொட கொத்தணி பரவல் ஊடாகவே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 37 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 83 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இதுவரையில் 180 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொட கொத்தணி பரவலின் எண்ணிக்கை 2342 ஆக உயர்வு.

அதேவேளை, நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 ஆயிரத்து 457 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 335 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles