நாட்டில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 501 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்து 90 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 23 ஆயிரத்து 506 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles