நாட்டில் மேலும் 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 48 பேருக்கும், அவர்களுடன் நெருங்கி பழகிய 12 பேருக்குமே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.
இதன்படி திவுலபிட்டிய கொத்தணியில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 307 ஆக அதிகரித்துள்ளது.










