வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் 5 மாகாணங்களில் கடும் வறட்சி நிலவுகின்றது. இதனால் 2 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வடமேல், கிழக்கு, தென்,வடமத்திய மற்றும் வடக்கு ஆகிய மாவட்டங்களிலேயே வறட்சியுடனான காலநிலை தொடர்கின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென் மாகாணத்தில் வறட்சி நிலவினாலும் இன்று மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.