” நான் பல்வேறு அமைச்சு பதவிகளை வகித்தவன். எனவே, அமைச்சு பதவி கேட்டு அலையவேண்டியதில்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது கட்டாயமாகும் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.










