நாளை கட்சி தலைவர்கள் கூட்டம்!

நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுவின் கூட்டம் , நாளை (02) முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் முடிவடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களது உணவு விவகாரம் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும்.

நாடாளுமன்றம் எதிர்வரும் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10ஆம் திகதிவரை கூடவுள்ளது.

நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் உணவு தமக்கு தேவையில்லை , வெளியில் இருந்து கொண்டுவந்து உண்பதற்கு அனுமதிக்குமாறு எம்.பிக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles