பாராளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் முதலாம் வாசிப்புக்கென பாராளுமன்றத்தில் நீதி அமைச்சரால் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு குறித்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதனை சட்டரீதியாக சவாலுக்குட்படுத்துவதற்கு ஒருவாரகாலம் வழங்கப்படும்.