நாளொன்றில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகூடிய கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 67 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. மே 17 முதல் மே 31 ஆம் திகதிவரை 19 பேரும் ஜுன் 1 முதல் ஜுன் 08 வரை 48 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

43 ஆண்களும், 24 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒரே தடவையில் உறுதிப்படுத்தப்பட்ட அதிகளவான கொவிட் மரணங்கள் பதிவான சந்தர்ப்பம் இதுவாகும்.

Related Articles

Latest Articles