லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகசேணை நகருக்கு அருகில் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் ஆற்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.
நிரூபா கமகே என்ற 15 வயது பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரின் மகன் என தெரியவருகின்றது.
கராத்தே போட்டியில் வெற்றி பெற்று (24.02.2024) பரிசு பெற்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது நண்பர்களில் ஒருவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் என்பதனால் அதை கொண்டாடும் வகையில் ஐவரடங்கிய நண்பர்கள் ஆற்றில் நீராடிவிட்டு அங்கு உணவு உண்ணவும் தயாராகியிறுந்துள்ளனர்.
இந்த நிலையில் நீராட சென்ற இந்த நண்பர்களில் கமகே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை கேள்வியுற்று ஆற்றுக்கு ஒடியவர்கள் நீரில் மூழ்கிய இளைஞரை சடலமாகவே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞரின் உடல் லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதணைக்கு சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஆ.ரமேஷ் ,நானுஓயா நிருபர், செதி பெருமாள், கௌசல்யா










