நுவரெலியாவில் நேற்று மாத்திரம் 38 பேருக்கு கொரோனா தொற்று!

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 38 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கினிகத்தேனை பகுதியில் 10 பேருக்கும், ஹங்குராங்கெத்த பகுதியில் இருவருக்கும், ஹட்டன் பகுதியில் 18 பேருக்கும், ரொசல்ல பகுதியில் இருவருக்கும், பிடவல பகுதியில் நால்வருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கடந்துள்ள 14 நாட்களில் நுவரெலியா மாவட்டத்தல் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles