‘நுவரெலியா மாவட்டத்திலுள்ள போலி வைத்தியர்களுக்கு முடிவு கட்டப்படும்’

நுவரெலியா மாவட்டத்திலுள்ள போலி வைத்தியர்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும். அத்துடன், அவர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – என்று நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தலகல தெரிவித்தார்.

” பெருந்தோட்ட பகுதியை அண்டிய நகர் மற்றும் கிராம புறங்களில் இவ்வாறான போலி வைத்தியர்கள் உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. அவர்களை இனம் கண்டு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles