நேற்று மாத்திரம் மேல் மாகாணத்தில் 290 பேருக்கும் மத்திய மாகாணத்தில் 80 பேருக்கும் கொரோனா

மேல் மாகாணத்தில் நேற்று மாத்திரம் 290 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 175 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 77 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 38 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மத்திய மாகாணத்தில் நேற்று 80 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 41 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 26 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 13 பேருக்கும் வைரஸ் பரவியுள்ளது.

Related Articles

Latest Articles