நேற்று மாத்திரம் 975 பேருக்கு கொரோனா – ஐவர் உயிரிழப்பு!

நாட்டில் நேற்று மாத்திரம் 975 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 65 ஆயிரத்து 53 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 67 ஆயிரத்து 200 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஐவர் நேற்று உயிரிழந்துள்ளனர். மூன்று ஆண்களும், பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles