இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை டாக்காவில் நடைபெறவுள்ளது.
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
குசல் பெரேரா இலங்கை அணியின் தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் தலைமை தாங்கிய முதல் போட்டி இதுவாகும். இலங்கை அணி தோல்வியடைந்த போதிலும் வெற்றிக்காக கடுமையாக போராடியது.
எனவே, முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு 2ஆவது போட்டியில் இலங்கை பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே இலங்கை இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான 3ஆவது போட்டி 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது.